திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.சங்கர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை சிபிசிஎல் நிறுவனம் 

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து திருவொற்றியூரில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது

 மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் சென்னை CPCL மேலாண்மை இயக்குனர் திது

அரவிந்த் குமார் அவர்கள் 

சிறப்பு விருந்தினராக வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கலாநிதி வீராசாமி அவர்கள் கலந்து கொண்டார் 

இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு  கே.பி.சங்கர் அவர்கள் பேசுகையில் திருவொற்றியூர் தொகுதியில் உள்ள பல அரசு பள்ளிகளுக்கு கட்டிட வசதிகளையும் திருவொற்றியூர் தொகுதிக்கு தரமான ஒரு விளையாட்டு திடல் அமைத்துக் கொடுக்க வேண்டும் என CPCL மேலாண்மை இயக்குனர் திரு   அரவிந்த் குமார் அவர்களிடம் திருவொற்றியூர் தொகுதி மக்கள் சார்பாக கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு கண் பரிசோதனை செய்து தரமான கண்ணாடிகளும் தேவைப்படுவோருக்கு மேல் சிகிச்சையாக அறுவை சிகிச்சையும் செய்து தருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு வி.ராமநாதன்

 தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு இரா.முருகேசன்

  ஐந்தாவது வட்டத்தின் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு கே.பி.சொக்கலிங்கம்

 மாமன்ற உறுப்பினர் திருமதி பானுமதிசந்தர்

வட்டக் கழக செயலாளர் 

ஏகா.கார்த்திகேயன்

ஆர் சந்தர்

சிறப்பு அழைப்பாளர்கள் மாதவரம் பண்ணை சந்திரசேகர்

 கொசப்பூர்  ரவிச்சந்திரன்

உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *