சென்னை திருவொற்றியூரில் அன்னை சிவகாமி நகர் தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள காமராஜர் துறைமுக நிறுவனத்திடமிருந்து (CSR) சமூக பாதுகாப்பு நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டம் மூலமாக பெற்ற நிதியையும் இணைத்து ரூபாய் 72 லட்சம் பெற்று திருவெற்றியூர் மண்டலம் 01, பகுதி 03-ல் அன்னை சிவகாமி நகரில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள், கழக அயலக அணி தலைவரும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள் அடிக்கல் நாட்டினார் நிகழ்ச்சி ஏற்பாடு மாமன்ற உறுப்பினர் .திரு.எ. தம்பையா அவர்கள் செய்திருந்தார்கள்

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு. மாதவரம் எஸ். சுதர்சனம் MLA., திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.சங்கர் MLA, திருவொற்றியூர் 1வது மண்டல குழு தலைவர் பகுதி செயலாளர் திரு.தி.மு.தனியரசு M.C, மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், அனைத்து அணிகளின் சார்ந்த கழக நிர்வாகிகள், மண்டல அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *