திருவெற்றியூர் தொகுதிக்குட்பட்ட 8வது வார்டில் பொது மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரியார் நகரில் கிழக்குப் பகுதி திமுக செயலாளரும் 1வது மண்டல குழு தலைவருமான தி.மு. தனியரசு முன்னிலையில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் கழக மீனவர் அணி துணை தலைவருமான கே.பி.சங்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்

திருவெற்றியூர் தொகுதி 8வது வார்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் – திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் துவக்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட
8வது வாட்டில் பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரியார் நகரில் கிழக்கு பகுதி திமுக செயலாளரும் 1வது மண்டல குழு தலைவருமான தி மு தனியரசு, மாமன்ற உறுப்பினர் ராஜகுமாரி விஜயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த முகாமினை திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், கழக மீனவர் அணி துணை தலைவருமான கே பி சங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். 

மேலும், இந்த முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43 சேவைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு இடம் பொதுமக்கள் வழங்கும் மனுக்களை பெற்று அதற்கு உடனடி தீர்வு எட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *